Header Ads



ஆளும் தரப்பினர் என்று தம்மை குறிப்பிட்டுக்கொள்பவர்கள், முதலில் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும்

பிரதமர் மற்றும்  நிதியமைச்சர் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை சிறுப்பிள்ளைத்  தனமான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தற்போது நாட்டில் பிரதமரோ, அவர் தலைமையிலான அமைச்சரவையோ கிடையாது. ஆளும் தரப்பினர் என்று  தம்மை குறிப்பிட்டுக்கொள்பவர்கள்  முதலில் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.