மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் அரசியல்வாதிகளை, வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம்
மக்களை முட்டாளாக்கும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப மக்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க மார்ச் 12 அமைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அந்த அமைப்பின ஒருங்கிணைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு இலாப நோக்கம் கருத்தி அவ்வபோது கட்சி தாவி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க ஒரே மாதத்தில் ஐந்து முறை கட்சி மாறியுள்ளார். வடிவேல் சுரேஷ் மூன்று முறை கட்சி மாறியுள்ளார்.
மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுபேற்க போவதாக கூறப்படுகிறது. கட்சி எது என்று கூறாமல் நாளைக்கும் தாம் அமைச்சர் என பெருமை பேசுகின்றனர்.
இவ்வாறு மக்களை ஏமாற்றி வரும் அரசியல்வாதிகளை முழுமையாக அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அது வரை மக்களுக்கு தெளிவுப்படுத்த போவதாகவும் ரோஹன ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை அப்படி வீட்டுக்கு அனுப்பியவர்களை மைத்ரீ இணைத்துக்கொண்டு அமைச்சுப் பதவிகளையும் வழங்கியுள்ளாரே.
ReplyDelete