Header Ads



பிரதமர் பதவியிலிருந்து, மகிந்த விலகுவாரா...? பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று (16), நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்தார்.

No comments

Powered by Blogger.