Header Ads



நாளை வெள்ளிக்கிழமை, பாராளுமன்றம் ரணகளமாகலாம்....!

தெரிவுக்குழு நியமனம் குறித்து பேசப்படவுள்ளதால் நாளை -23- பாராளுமன்றம் ரணகளமாகலாம்.

சபையில் பெரும்பான்மை ஆதரவுள்ள தரப்பே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சபாநாயகர் கொண்டிருப்பதால் நாளை பெரும் எடுப்பில் விவாதம் நடக்கலாம்.

எல்லா கட்சிகளும் தெரிவுக்குழுவுக்கான பெயர்களை அறிவித்துள்ளன. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஈ பி டி பி கட்சியும் நாளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான தனது பிரதிநிதித்துவத்தை கோரவுள்ளது.

இப்படியான பின்னணியில் நாளை சபாநாயகருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருக்கிறது.

காலை சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

அதுவும் காரசாரமாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Ramasamy Sivarajah

No comments

Powered by Blogger.