நாளை வெள்ளிக்கிழமை, பாராளுமன்றம் ரணகளமாகலாம்....!
தெரிவுக்குழு நியமனம் குறித்து பேசப்படவுள்ளதால் நாளை -23- பாராளுமன்றம் ரணகளமாகலாம்.
சபையில் பெரும்பான்மை ஆதரவுள்ள தரப்பே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சபாநாயகர் கொண்டிருப்பதால் நாளை பெரும் எடுப்பில் விவாதம் நடக்கலாம்.
எல்லா கட்சிகளும் தெரிவுக்குழுவுக்கான பெயர்களை அறிவித்துள்ளன. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஈ பி டி பி கட்சியும் நாளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான தனது பிரதிநிதித்துவத்தை கோரவுள்ளது.
இப்படியான பின்னணியில் நாளை சபாநாயகருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருக்கிறது.
காலை சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
அதுவும் காரசாரமாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
Ramasamy Sivarajah
Post a Comment