Header Ads



காங்கேசந்துறை கடலில் கரையொதுங்கிய, "பனை ஓங்கில் மீன்" (படங்கள்)



-பாறுக் ஷிஹான்-

காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் ( மயானத்துக்கு அண்மையில்) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது பனை ஓங்கில் மீன்.  இது கஜா புயலின் காரணமாக கடல் கற்களில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது கரையொதுங்கி 4 நாட்கள் ஆகின்றது.

மீனின் முகப் பகுதி சேதமடைந்துள்ளதுடன். தலைகீழாக கரையொதுங்கியுள்ளது.

நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்குநெருக்கமான இனத்தைச் சேர்ந்தவையாகும்.

இதனை பலரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆரம்பத்தில் இதனை வெட்டுவதற்கு சிலர் முயற்சித்த போது அருகில் உள்ள கடற்படையினர்  மக்களை உடனே இப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை எனவும் ஒருவர் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.