Header Ads



எதிர்பார்ப்புகளிடையே இன்று 1 மணிக்கு பாராளுமன்றம் - கலரிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிமறுப்பு

நாடாளுமன்றம் இன்று -19- பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்களுக்கு இன்று அனுமதியளிக்கப்படமாட்டாது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில், அதற்கு முன்தாக, ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இதன்போது, நாடாளுமன்றத்தில் இன்றைய நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.