Header Ads



"ஐ.தே.க.வுடனான தொடர்பை, ஜனாதிபதி முறிக்க வேண்டும்"

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தற்போதைய நிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் ஆரம்பமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக  ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் போக்கை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அதனால் மாற்று அரசாங்கம் ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக  வாசுதேவ நாணயக்கார எம்.பி. குறிப்பிட்டார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.