Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய, போட்டியிடுவாரென நான் கூறவில்லை - மகிந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என தாம் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை தாம் களமிறக்குவதாக இந்தியாவில் வைத்து ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, இது முற்றிலும் கற்பனை செய்துக்கொள்ளப்பட்ட விடயம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.