Header Ads



இன்றுமுதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை 5 நிமிடங்களில் பெறமுடியும்

பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகம் இன்றுமுதல் 17.09.2018  பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளுக்கு விநியோகிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. 

பொதுமக்கள் 1960 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதிக்கான சான்றிதழ்களை ஐந்து நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்சமயம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 332 பிரதேச செயலகங்களில் 183 செயலகங்கள் இந்த சான்றிதழ்களை விநியோகித்து வருகின்றன. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

1 comment:

  1. Sounds good but let's see how it's gonna work...

    ReplyDelete

Powered by Blogger.