Header Ads



தேடப்படும் பிக்குவினால், பொலிஸ்காரர் கழுத்து நெரித்து கொலை - இரத்தினபுரி விகாரையில் கொடூரம்

இரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்காக இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் அவரின் கைக்கு தாக்குதல் மேற்கொண்டு அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. இந்த தேரர் எப்படி, இவருக்கு ஜம்பரா ? பாவாடையா?

    ReplyDelete
  2. ஓ தேரராச்சே பொது மன்னிப்பு வழங்கு வாங்களோ?

    ReplyDelete
  3. தேரர் கூட்டம், வானத்தில் இருந்து குதித்தவர்கள்.

    அவர்களை பற்றி பேசினால், எமது கடைகள், வாகனங்கள் எரியும்.

    தப்பித் தவறிப் பேசினாலும், எம்மை மேலுலகத்திற்கு அனுப்பி விடுவார்கள்.

    எமக்கு ஜெனீவாவிற்கு எல்லாம் அலைந்து திரிய முடியாது.

    ReplyDelete
  4. @Moha
    தவறு அவருக்கு விடுதலை தான். ஏனெனில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே பௌத்தத்திட்கு முன்னுரிமை வழங்கும் சட்ட மூலத்திற்கு உள்ளாடை அணியாமல் வந்து நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கினார்கள். எனவே பொது மன்னிப்பு மூலம் எந்த தேரருக்கும் விடுதலையாகும் உரிமை உண்டு .
    பாவடையும் முக்காடும் அணிய வேண்டியது முஸ்லிம்கள் தான்.

    ReplyDelete
  5. ஜனாதிபதி கருணையுள்ளவரல்லவா?எல்லாம் வல்லபடி நடக்கும்.பாதுகாப்ப அங்கி வேறு.

    ReplyDelete
  6. பவுத்தத்திற்கு முன்னுரிமை அளித்ததனால், சம்பந்தர் இன்னமும் எதிர்க் கட்சி தலைவராக இருக்கிறார்.

    இல்லாவிட்டால், சம் சும் கொம்பனிகள், பாராளுமன்றில் ஒரு மூலையில் இருந்து கொண்டு, பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.