கற்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டம்
கற்பிட்டி நகரின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு செல்லும் வீதியை மறித்து இன்று (08) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் விநியோகம் அடிக்கடி துண்டிக்கப்படுவதனால், தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும், விவசாய செய்கைகளை முன்னெடுப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment