Header Ads



யாழ்ப்பாணம் - ஜின்னா வீதியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)



யாழ் குடியிருப்பு பிரதேசங்களில் பாரிய வர்த்தக கட்டிடங்கள் நிர்மானிப்பதற்கு எதிரான தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்பினால் இன்றய தினம் கலீமா லேன் ஜின்னா வீதியில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணி.

கலீமா லேன் -  ஜின்னா வீதியில் அமைக்கப்படும் ரெஸ்டோரண்ட் இற்கும் - பொதுவாக மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் இவ்வாறு பாரிய வர்த்தகக் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் அமைதிப் பேரணி - மக்கள் ஆர்ப்பாட்டம் இன்று 2018.05.25 ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் கலீமா லேன் சந்தியில் இடம்பெற்றது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில். சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விச் சமூகப் பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், பிரதேசத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், (வடமாகாணசபை உறுப்பினர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள்) எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது.  பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாவன பின்வருமாறு.

யாழ்ப்பாணம் கிராம சேவையாளர் பிரிவி ஜே86,87 (13ம் வட்டாரம்) மக்களின் ஏகோபித்த தீர்மானம்.  காலம் 25-05-2018 வெள்ளிக்கிழமை.

 மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதி அவர்கள்,  ரணில் விக்கிரமசிங்கா பிரதமர் அவர்கள்,   ரெஜினோல்ட் குரே வடக்கு மாகாண ஆளுனர் அவர்கள்,  சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள்,  சம்பிக ரணவக்க நகர திட்டமிடல் அமைச்சர் அவர்கள்,  இமானுவேல் ஆனல்ட் யாழ் மாநகர முதல்வர் அவர்கள், 

13ம் வட்டார தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாம் அமைதியான குடியிருப்புப் பிரதேசமொன்றிலே ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றோம.; எமது பிரதேசத்தில் பாலர் பாடசாலைகள், பாடசாலைகள், புனித வணக்கஸ்தலங்கள் என்பன சு10ழ்ந்து காணப்படுகின்றன.  எமது மக்களின் அமைதியான, சகவாழ்வோடு கூடிய வாழ்வுமுறையை சிதைக்கும் வகையில் எமது பிரதேசங்களில் அண்மை நாட்களாக வர்த்தக முயற்சிகள் என்னும் போர்வையில் ஒரு சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இம்முன்னெடுப்புகளானது  

எமது மக்களிடையே போதைவஸ்துப் பாவனையை அறிமுகம் செய்வதும், எமது பிரதேசத்தை மதுப்பாவனைக்குரிய, போதைவஸ்துப் பாவனைக்குரிய பிரதேசமாக மாற்றியமைக்கும் நோக்கிலானவை என்பதை நாம் அறிகின்றோம். 

 எமது பெண்கள், சிறுவர்களின் அமைதியான கலாசாரக் கட்டுப்பாட்டோடு கூடிய வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் நோக்கிலானவை என்பதை நாம் அறிகின்றோம். 

 எமது மக்களின் அமைதியான குடும்பவாழ்வை சீர்குலைக்கின்ற, சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்த வல்லன என்பதையும் அறிகின்றோம். 

எனவே இவ்வடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள மக்களாக நாம் 


எமது மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் பாரிய வர்த்தக நோக்கிலான கட்டிடங்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்றும்;  ஏற்கெனவே இயங்கிவருகின்ற சட்டவிரோத லொட்ஜ்கள், தங்குமிடங்கள், களியாட்ட நிலையங்களை உடனடியாக மூடிவிடவேண்டும் என்றும்; போதைவஸ்துப் பாவனையற்ற மதுபானப் பாவனையற்ற குடியிருப்புப் பிரதேசமாக எமது பிரதேசத்தை தொடர்ந்தும் பேணுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும்; 

25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல 01:30 மணிக்கு தன்னார்வமாக ஒன்றிணைந்து இத்தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்; இத்தீர்மானங்களை தங்களின் மேலான கவனத்திற்கும் கொண்டுவருகின்றோம்; இத்தீர்மானங்களின் அடிப்படையில் தாங்கள் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்பதாகும். 



1 comment:

  1. தேவையற்ற எதிர்ப்பு

    ReplyDelete

Powered by Blogger.