ரவி, மீண்டும் வருகிறார்..?
புதிய அமைச்சரவை பதவியேற்கும் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார்.
பிணை முறி தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதை அடுத்து அவர் வெளிவிவகார அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ரவி கருணாநாயக்க தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பிரதமருக்கு பெற்றுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற இணக்கத்தின் அடிப்படையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Post a Comment