"அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் கட்டுப்படுத்த, நாங்கள் ஒருபோதும் முன்வரமாட்டோம்"
கண்டி, தெல்தெனிய அசம்பாவிதம் நாடுபூராகவும் பரவியதன் மூலம் பிரதமரின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவிதத்துடன் யாரும் எங்களை தொடர்புபடுத்த முயற்சிக்கவேண்டாம். நாங்கள் செயற்பட்டால் இதனைவிட பாரிய விளைவுகள் ஏற்படும். தீ மூட்டுவதன்மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தெல்தெனிய, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை உடன் நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு நாங்கள் பகிரங்கமாக கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தோம். எமது கருத்தை தேசிய தொலைக்காட்சி பகல் வேளைகளில் ஒளிபரப்பி பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் இரவுநேரத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சிலரை அழைத்து எங்களுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்பி வருகின்றது. அதேபோன்று மஹிந்த ராஜபக்்ஷவின் கையாளர்களும் எங்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையான முறையில் கருத்து தெரிவித்து சம்பவத்தை திசை திருப்பி வருகின்றனர். சிலர் அதனை அரசாங்கத்தின் இயலாமை எனவும் தோல்வியடைந்தவர்களின் செயல் எனவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சகல இன மக்களும் தங்கள் கட்சி, மத பேதங்களை மறந்து மனிதாபிமானத்துடன் சம்பவத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தெல்தெனியவில் 4 முஸ்லிம்களால் இடம்
பெற்ற தவறுக்கு அக்குறணை, திகன,மடவள முஸ்லிம்கள் பொறுப்பாக முடியாது. இது யாருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இனவாத அடிப்படையில் இதனை வெளிக்காட்ட முற்பட்டதனாலேயேபிரச்சினை தீவிரமாக மாறியது. அத்துடன் தெல்தெனியவில் இடம்பெற்ற கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்து அவர்களை சிறையில் அடைத்திருப்பதாக அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. அதனால்தான் சிங்கள மக்கள் ஆத்திரமடைந்து அங்கு கூடினர். இதற்கு பிரதமரே பொறுப்புக் கூறவேண்டும். அவரின் இயலாமையே இதற்கு காரணமாகும்.
அத்துடன் அளுத்கம சம்பவம் இடம்பெற்றபோதும் சிலர் எங்கள்மீதே குற்றம் சாட்டினர். அதில் சில சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் வருத்தமடைகின்றோம். ஆனால் சம்பவம் தொடர்பில் மக்கள் பலரையும் குற்றம்சாட்ட ஆரம்பித்ததால், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் அதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்குமாறு நாங்களே ஆரம்பத்தில் தெரிவி த்தோம். அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கமும் அதனை செய்யவில்லை.
அத்துடன் பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம், மக்களின் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கியுள்ளது. அதனால்தான் மக்கள் விரக்தியடைந்து ஜனவரி 8ஆம் திகதி செய்த தவறை நிவர்த்திசெய்யும் வகையில் கடந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தபோதும் ஆட்சியை மாற்றமுடியாத விரக்தியினால்தான் நாடுமுழுவதும் இரத்த ஆறு ஓடுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இதற்கு பதிலளிக்கவேண்டும்.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்குள் பல விடயங்களில் சிக்கிக்கொண்டுள்ளார். கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கும் இவர் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகின்றார். எனவே பிரதமர் தனது இயலாமையை மறைக்கவே இவ்வாறான அசம்பாவிதங்களை உடனடியாக தடுக்காமல் செயற்படுகின்றார். அதனால் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் இந்த பதவியில் இருக்காமல் தகுதியான ஒருவருக்கு வழங்கிவிட்டு கெளரவமாக வெளியேறவேண்டும். அத்துடன் நாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கின்தொட்ட, அம்பாறை சம்பவங்கள் பாரியளவில் பரவாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். தற்போது கண்டி சம்பவத்தின் எதிரொலியாக வேறு பிரதேசங்களில் ஏற்படவிருந்த அசம்பாவிதங்களையும் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். இந்த சம்பவத்துக்கு எங்களை குற்றம்சாட்ட முயற்சித்தால் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதனை கட்டுப்படுத்த நாங்கள் ஒருபோதும் முன்வரமாட்டோம் என்றார்.
MEYA BOUDAYEK NEMEI
ReplyDeleteநல்லா நடிக்கிறார் ஜானம்
ReplyDeleteAllah will newer leave oppressing people.he will driven out in the past
ReplyDelete