இனவாதம் கக்கிய, இராணுவ கப்டன் கைது
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கப்டன் சிறினாத் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதத்தை பரப்பியமை மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை மற்றும் சைபர் வழியாக நெறிமுறைகள் மீறி இளைஞர்களை கோபப்படுத்தும் பதிவுகள் வெளியிட்டமை போன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment