Header Ads



பெளத்தசிங்கள பயங்கரவாதத்துக்கு எதிராக, கனடாவில் நாளை ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கனடா வென்கூவரில் வாழும் இலங்கை முஸ்லீம்களின் அவசர கூட்டம் கடந்த 6ம் திகதி மாலை மஹ்ரீப் தொழுகையின் பின் இடம்பெற்றது.
இது பற்றி மேலும் அறியவருவதாவது,

கனடா முஸ்லிம் சங்க MAC கட்டிடத்தில் நடந்த இக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அவற்றில் சில நாளை 11ம் திகதி வென்கூவர் நகரத்தில் மாலை 3 மணிக்கு சிங்கள பெளத்த பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அமைதியாக நடத்துவது.

கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சரும் வென்கூவர் தெற்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஜித் சஜ்ஜான் அவர்களை சந்தித்து நிலைமைகளை விளக்கி மகஜர் ஒன்றை கையளிப்பது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்பன முக்கிய தீர்மானங்களாகும்.  இந்த கூட்டத்தில் அதிகமான இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்

-ஸகி ஜுனைத்-

1 comment:

Powered by Blogger.