160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைப்பு, 10 பள்ளிவாசல்கள் சேதம், பலகோடி ரூபாய்கள் இழப்பு
கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தசிங்கள காடையர்கள் மேற்கொண்ட வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு, சில பள்ளிவாசல்களுக்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பலநூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும' சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
LET THE SINHALESE DEMOCRATIC FORCES AND THE TAMIL SPEAKING PEOPLE UNITE TO SAFEGUARD THE MUSLIMS OF KANDY - V.I.S.JAYAPALAN POET
ReplyDelete*
தென்னிலங்கை தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழ்பேசும் மக்கலும் சிங்கள ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைவோம்.
*
சில நாட்க்கள் என் கணனி முடங்கிப்போனது. இன்னும் செம்மைப்படவில்லை. இக்காலகட்டத்தில் கண்டி பிரதேசத்தில் பரவி வரும் முஸ்லிம் மக்கள்மீதான தாக்குதல் அதிற்ச்சி தருகிறது.
*
சில காடையர்களால் ஒரு சிங்கள இளைஞன் கொல்லபட்ட குற்றச்செயல்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்க்கு மாறாக அப்பாவி முஸ்லிம் மக்கள்மீதான தாக்குதல் கட்டைழ்த்துவிடப்பட்டுள்ளமை இந்த நாடு சந்தித்த பேரழிவுகளில் இருந்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. இது நாளை நமக்கு என்பதை தமிழர்களும் மலையக தமிழர்களும் சிங்கள ஜனநாயக சக்திகளும் உணர்ந்து எதிர்வினையாற்ற வேண்டிய தருணமிது.
*
உண்மையில் இது முஸ்லிம் மக்களுக்கு மட்டும் எதிரான சவால் மட்டுமல்ல என்பதை நாம் தமிழிலும் சிங்களத்திலும் உரத்துச் சொல்லவேண்டும். உலக மட்டத்திலும் நாம் எம் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.