Header Ads



முஸ்லிம் தலைவரகளின் ஏகாதிபத்திய, குணங்கள் அதிகரித்து செல்கின்றன -கருணா

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தீர்க்காமானதொரு முடிவு தமிழ் மக்கள் மத்தியில் எட்டாக்கனியாகவே இருந்து வருவதாக கருணா தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தேற்றாத்தீவைச் சேர்ந்த தி.தேவறஞ்சனின் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்கள்சந்திப்பின்போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிங்களத் தலைவர்களுடன் எமக்குப் பிரச்சனைகள் இல்லை, ஆனால் முஸ்லிம் தலைவரகளின் ஏகாதிபத்தியக் குணங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

இவ்விடத்தில் நான் அப்பாவி முஸ்லிம் மக்களைக் குறை கூறவில்லை, இனத்துவேசமாகவும் நான் கூறவில்லை. ஆனால் முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கில் 11 ஆசனங்களை வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் எம்மைப்பார்த்து திமிராகப் பேசுகின்ற நிலமையையும் கேட்டக வேண்டிய நிலமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.


1 comment:

  1. இவனுக்குப் பைத்தியம்

    ReplyDelete

Powered by Blogger.