ரவி கைதானால், அம்பலமாகவுள்ள இரகசியங்கள்
தான் கைதுசெய்யப்பட்டால் பிணைமுறி மோசடி தொடர்பான சகலவிதமான இரகசியங்களையும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அம்பலப்படுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து ரவியை நீக்கவேண்டும் என்று திலக் மாரப்பன குழு யோசனை முன்வைத்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேர்தலுக்கு முன்னர் ரவி கருணாநாயக்க கைதுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டால் தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்பதாலேயே மௌனம் கலைந்து, பிணைமுறி மோசடி தொடர்பான இரகசியங்களை ரவி கருணாநாயக்க அம்பலப்படுத்தத் தயாராகிவருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது. S.o
Post a Comment