அனைத்து குற்றச்சாட்டுக்களுடனும், மைத்திரியும் சம்பந்தப்பட்டுள்ளார் - பசில்
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
மகிந்த ஆட்சியின் போது அமைச்சரவையில் மைத்திரியும் இருந்தார். அவர் தான் அதிக காலம் அமைச்சரவையில் இருந்தார்.
சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலும், மகிந்த ஜனாதிபதியாக இருந்த போதிலும் அமைச்சரவையில் மைத்திரி இருந்தார். ஆகவே அனைத்து குற்றச்சாட்டுக்களுடனும் மைத்திரியும் சம்பந்தப்பட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் பசில் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment