5 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் பாலித
புலத்சிங்ஹல நகரில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஐந்து நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
தான் ஒருபோதும் போராட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை எனவும் தனது புதல்வனின் உடல்நல குறைவின் காரணமாகவே உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறியமை மற்றும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் புலத்சிங்ஹல பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து அதற்கு சட்டநடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9ம் திகதி பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. dc
Post a Comment