Header Ads



தரம் 6 முதல் உயர்­தரம் வரை­யி­லான, வகுப்­புக்­க­ளுக்கு மடி க­ணி­னி

நாட­ளா­விய ரீதியில் உள்ள சகல பாட­சாலை­க­ளிலும் தரம் 6 தொடக்கம் உயர்­தரம் வரை­யி­லான வகுப்­புக்­க­ளுக்கு  மடி க­ணி­னி­களை வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரிய வசம் தெரி­வித்­துள்ளார்.  மடி ­க­ணி­னி­களை வழங்கும் வேலைத்­திட்டம் எதிர்­வரும் இரண்டு மாதங்­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளி­வுப்­ப­டுத்­து­கையில், 

சர்­வ­தேச ரீதியில் தற்­போது கல்வி நட­வ­டிக்­கைகள் தொழில்­நுட்­ப­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சர்­தேச ரீதியில் அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் பல­வற்றில் ஆரம்ப கல்வி தொடக்கம் கல்வி நட­வ­டிக்­கைகள் தொழில்­நுட்ப ரீதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் தற்­போது இலங்­கை­யிலும் கல்வி நட­வ­டிக்­கை­களை தொழில்­நுட்ப ரீதியில் முன்­னெ­டுக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

மேலும் தற்­போது இலங்­கையின் கல்வி துறை முன்­னைய காலங்­களை விடவும் பாரிய முன்­னேற்­றங்­களை அடைந்து வரும் நிலையில், மேலும் அதனை விருத்தி செய்யும் வகை­யி­லான செயல் திட்­டங்­களை அர­சாங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு  என்­பன இணைந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இச் சந்­தர்ப்­பத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் இதற்­கான உத­விகள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. 

அத­ன­டிப்­ப­டையில்  இலங்­கையின் தமிழ்  மொழி­மூ­ல­மான பாட­சா­லை­க­ளுக்கு  இல­வச நூல்­களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம் பற்றிய செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இந்தியாவில்   கடந்த வாரம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.