இலங்கைக்கான 5 புதிய தூதுவர்கள்
இலங்கைக்கான 5 புதிய தூதுவர்கள் இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.
சூடான், வியட்நாம், மியன்மார், கொரியா மற்றும் சீன நாட்டின் தூதுவர்களே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இலங்கைக்கான சூடான் நாட்டுத் தூதுவராக ஷிராஜீடீன் ஹமீட் யூசுப், வியட்நாம் தூதுவராக பாம் தி பிச் நொஜக், மியன்மார் தூதுவராக ஹன் தூ, கொரியாவின் தூதுவராக லீ ஹியோன் மற்றும் சீன தூதுவராக செங் சியுவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment