வகுப்பறையில் மயங்கிவிழுந்த, மாணவன் மரணம்
கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன் நேற்று வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகம்புர-இரண்டாம் பிரிவுஇவெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த எட்மன் எரைம் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு களுபோவில வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 13 மணித்தியாலங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதும்இஇன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment