Header Ads



ஜிந்தோட்டையில் லதீபின், மகத்தான பங்களிப்பு


சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும், விசேட அதிரடிப் படையின் கட்டளை தளபதியுமான MR லதீப்  ஜிந்தோட்டை மக்களை காப்பாற்றுவதில் பெரும் பங்களிப்புச் செய்ததாக, முஸ்லிம் அரசியல் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.

ஜிந்தோட்டையில் பௌத்தசிங்கள காடையர்கள் மேற்கொண்ட அநியாயத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியபோது,  சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லதீப்புக்கு முஸ்லிம் வட்டாரங்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் பறந்துள்ளன.

இதையடுத்து அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக விசேட அதிரடிப்படையினர் ஜிந்தோட்டையில் களம் இறக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் அங்கு தங்கியிருக்க வேண்டுமெனவும் முஸ்லிம்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லதீப் விசேட அதிரடிப்படையினரை ஜிந்தோட்டையில் துரிதமாக களமிறக்கியிருக்காவிட்டால், முஸ்லிம்களுக்கு அங்கு இன்னும் பல சேதங்கள் ஏற்பட்டு இருக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட:டுள்ளது.

2 comments:

  1. மாஷா அல்லாஹ் நல்லதொரு பணி. அவருக்கு அல்லாஹ்வுடைய நட்பாக்கியம் கிடைக்கட்டும்

    ReplyDelete
  2. உம்மை போன்ற வர்கள் சமூகத்துக்கு தேவை

    ReplyDelete

Powered by Blogger.