Header Ads



ஜின்தோட்டயில், மீண்டும் ஊரடங்கு

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம், நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன் தெரிவித்தார்.

காலி,ஜின்தோட்ட, குருந்துவத்த, மஹா ஹபுகல, வெலிபிட்டி மோதர, உக்வத்த மற்றும் பியதிகம ஆகிய கிராம ​சேவகர் பிரிவுகளுக்கே, பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.