காணாமல் போன 8 பேரில், ஐவரின் உடல்கள் மீட்பு
லக்கலை தெல்கமு ஆற்றில் மூழ்கி காணாமல் போன எட்டு பேரில் ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மீட்புப் பணியில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இணைந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை, லக்கலை தொல்கமு ஆற்றில் நீராடச் சென்ற 8 பேர்; இன்று நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.
வான் வாகனம் ஒன்றில் வந்த சிலரே, இன்று பகல் இவ்வாறு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment