கட்டாக்காலிகள் சட்டத்தின் கீழ், ஆணுறைகளை சமர்பிக்காதீர்கள் என நீதிமன்றம் உத்தரவு
பால்வினை நோய்களைத் தடுக்கும் பொருட்களை வழக்கின் தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பால்வினை நோய்களைத் தடுக்கும் ஆணுறை உள்ளிட்ட பொருட்களை வழக்கு தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்கக் கூடாது என அதனூடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுக்காற்று மற்றும் நன்னடத்தை பிரிவூடாக இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதுவரை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழக்கு தடயப் பொருட்களாக அவர்களிடமிருந்து மீட்கப்படும் ஆணுறை உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொற்றுவதனை தடுக்கும் பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்து வந்தனர். குறிப்பாக கட்டாக்காலிகள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் இத்தகைய பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலேயே அவற்றிற்கான வழக்குப் பொருட்களாக இவ்வாறு ஆணுறைகள் உள்ளிட்டவை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இந்த பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சினால் இந்த பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் இவற்றை வைத்திருப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது. எனவே ஆணுறைகள் மற்றும் பால்வினை நோய்களை தடுக்கும் பொருட்களை தடயப் பொருட்களாக மன்றில் சமர்பிப்பதை தவிர்க்குமாறு தலைமையகம் அறிவித்து ள்ளதாக அறியமுடிகிறது.
Post a Comment