ஹம்பாந்தோட்டை போர்க்களமானது 26 பேர் கைது, பொலிஸாருக்கு காயம்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்ம் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியிருந்தது.
எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Why did not you arrest those mps?
ReplyDelete