நிலத்துக்கடியிலிருந்து புலிகளின், பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று -08- காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும்.
மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.
அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு பின் பகுதியில் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முகாம் ஒன்று இருந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment