ஹஜ் பெருநாள், உலகவாழ் மக்களுக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகும் - ரணில்
"சுயநலம், பேராசை என்பவற்றிலிருந்து விடுபட்டு தம்மிடமுள்ளவற்றை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளுதல், சக வாழ்வு மற்றும் உயர்வு, தாழ்வினை நீக்கி சமத்துவத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற உயரிய நோக்கங்களுக்கு ஹஜ் பெருநாள் முன்னுரிமை வழங்குகிறது. அது முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு உலகவாழ் மக்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என நான் கருதுகிறேன்" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஏழை – பணக்காரன், கற்றவர் – கல்வியற்றவர் என்ற எவ்விதமான பேதமுமின்றி மக்கா நகரில் ஒன்று சேர்ந்து, சமயக் கிரியைகளை மேற்கொள்ளும் ஹஜ் நிகழ்வு இஸ்லாம் மார்க்கத்தில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் முக்கியமானதோர் சமய நிகழ்வாகும் .
இப்ராஹீம் நபியவர்கள் தனது மகனான இஸ்மாயில் நபியை இறைவனுக்காகத் தியாகஞ் செய்ய முன்வந்தமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வினை உலகம் முழுவதும் பரந்துள்ள இஸ்லாமிய பக்தர்கள் ஒன்றிணைந்து உலக அமைப்புக்காக சமயக் கிரியைகளை மேற்கொள்ளும் சர்வதேச மாநாடாகவும் கருதமுடியும்.
சுயநலம் மற்றும் பேராசை என்பவற்றிலிருந்து விடுபட்டு தம்மிடமுள்ளவற்றை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளுதல், சக வாழ்வுடன் வாழுதல், சமூகத்தில் உயர்வு, தாழ்வினை நீக்கி சமத்துவத்துத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற உயரிய நோக்கங்களுக்கு ஹஜ் பெருநாளில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அது முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு உலகவாழ் மக்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என நான் கருதுகிறேன்.
அந்த ஆன்மீகப் பெறுமானங்களை உலகிற்கு கொண்டு செல்வதற்கான பலம், துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து, இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பக்தர்களுக்கும் மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்". என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
Do not HOODWINK the Sri Lankan Muslims with sweet words on the eve of Haj Festival Mr. Prime Minister. GIVE THE MUSLIMS THEIR RIGHTS PLEASE. If not for our "TRIPPING THE BALANCE VOTES" along with the TAMIL VOTES, you would have never formed the "YAHAPALANA GOVERNMENT" or Maithripala Sirisena would have never become the President in 2015. Because you have "CHEATED US" the Muslims are waiting to make "A CHANGE", Insha Allah.
ReplyDelete"The Muslim Voice".