மியன்மார் அகதிகள் தஞ்சம்பெற, இலங்கை வரவில்லை - அவர்கள் மீது கருணை காட்டுங்கள் - லக்ஷமன் கிரியெல்ல
-MM.Minhaj-
மியன்மார் அகதிகள் தஞ்சம் கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கு வருகைதரவில்லை. இந்தியாவுக்கு சென்ற போது படகு இயந்திரம் செயலிழந்தமையினால்இலங்கைக்கு வந்தனர். எனவே பெளத்த நாடு என்ற வகையில் மியன்மார் அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
மியன்மார் அகதிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மிரிஹான பொலிஸ் நிலையத்தின் அருகாமையிலுள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மியன்மார் அகதிகள் கல்கிஸை பகுதிக்கு சென்றுள்ளனர்.
மியன்மார் அகதிகள் இலங்கையில் தஞ்சமாகுவதற்கு வரவில்லை.
அவர்கள் ஆரம்பித்தில் இந்தியாவுக்கே சென்றனர். இந்தியாவுக்கு சென்ற வேளை அவர்கள் பயணித்த படகு இயந்திரம் கோளாறு காரணமாக செயலிழந்தமையினால் செல்வதற்கு இடமின்றி இலங்கைக்கு வருகை தந்தனர்.
உண்மையில் அவர்கள் அப்பாவிகளாகும். தற்போது இலங்கையில் நிம்மதியாக வாழ இடமளிக்க வேண்டும். இலங்கை ஒரு பெளத்த நாடாகும். பெளத்த தர்மத்தை அனுசரித்து மியன்மார் அகதிகளுக்கு நாம் கருணை காட்ட வேண்டும்.எனவே இவர்கள் விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
புதிய பொலிஸ் மா அதிபர் ஒருத்தன் சொன்னானே அது செய்வேன் இது செய்வேன் என்று எங்க இப்ப சென்று ஒளிஞ்சி கிட்டு இருக்கிறான் போததுக்கு நீதி அமைச்சர் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்கள் எங்கே.
ReplyDelete