கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழா
இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 15.09.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப்பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக பிரதமர் கௌரவ ரனில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசம் அவர்களும், விசேட அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
Post a Comment