இது எவ்வளவு பெறுமதியான, முத்தம் தெரியுமா..?
போர் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறி தனது குடும்பத்தை பிரிந்த நபர் ஒருவருடம் கழித்து தனது குழந்தைகளை மீண்டும் சந்தித்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவை சேர்ந்தவர் Ammar Hammasho (34). ஒரு வருடத்துக்கு முன்னர் வான்வழி தாக்குதல் காரணமாக Ammar-ன் வீடு தரைமட்டமானது.
இதையடுத்து தனது குடும்பத்தை பிரிந்து வேறு இடத்துக்கு செல்லும் நிலைக்கு Ammar தள்ளப்பட்டார்.
இந்நிலையில் ஒருவருடம் கழித்து தனது மூன்று மகன்களையும் Cyprus நாட்டின் Kokkinotrimithia நகரில் அமைந்திருக்கும் குடியேற்ற மையத்தில் Ammar சந்தித்தார்.
மையத்தின் நடுவில் வேலி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் ஓட்டை வழியாக மூன்று பிள்ளைகளுக்கும் Ammar நெகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்துள்ளார்.
What a memorable moment for a father...? Very very sentimental.
ReplyDelete