இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின், முன்னாள் ஜனாதிபதியை நாடுகடத்த கோரிக்கை
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹுசெய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார்.
முன்னதாக, மொஹமட் நஷீதை இலங்கைக்கான மாலைதீவு தூதர் சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் தடுத்து வைக்க முயற்சிப்பதாகவும், பலவந்தமாக அவரை மாலைதீவுக்குத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் நஷீதின் சார்பாக சர்வதேச சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுபற்றித் தெரிவித்த சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அமல் க்ளூனி, நஷீதைத் தடுத்துவைக்க மாலைதீவு தூதர் முயற்சிக்கும் பட்சத்தில் அது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
“விசாரணை என்ற பெயரில் நஷீத் பழிவாங்கப்பட்டுள்ளார். எனவே, அவர் தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை. அவர் மாலைதீவுக்குத் திருப்பியனுப்பப்படக் கூடாது. அதற்கான எந்தவொரு முயற்சியையும் இலங்கை எடுக்கக் கூடாது. அவருக்குரிய மரியாதைகளுடன் அவரது உரிமைகளை வழங்க இலங்கை உறுதியளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மோமூன் அப்துல் கையூமின் முப்பது வருட ஆட்சி, 2008ஆம் ஆண்டு மொஹமட் நஷீத் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. எனினும், 2012ஆம் ஆண்டு நஷீதுக்கு எதிராகக் கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவர் பதவி விலகினார்.
எனினும், அவரது பதவிக் காலத்தில் நீதிபதியொருவரைக் கடத்த முயற்சித்ததாகக் கூறித் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவருக்கு பதின்மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
Mohamed Nasheed was Suffering at the hand of stooge of western powers,Mohamed Nasheed made a big mistake in UNO 2010/2011,when he said that not to interfere in Srilankan problem that they suffered 30 year war and defeated LTTE a terrorist group.So let them to do their own, this is when UNo tried to enforce it's some restriction on Srilankan government on the basis of human right violation.
ReplyDeleteSo soon after within 6 month after his speech he was toppled in coup now he is suffering endlessly.it is the Arab world and Muslim worlds unnecessary closeness to the Srilanka and stood by the side of Srilanka without considering consequences of going against western world and UNO. Now Muslim world and Muslim leaders who supported Srialnka are suffering.
SL must deport these criminals like Nasheed immediately
DeleteWhat about ISIS?
ReplyDelete