Header Ads



"இலங்கையில் ரோஹின்யர்களுக்கு ஆதரவான போராட்டம், பாரிய எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்" - ஜனாதிபதிக்கு, பொதுபல சேனா கடிதம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் வெறும் அர­சியல் உள்­நோக்­கங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகும். இது இன, மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிளவை ஏற்­ப­டுத்தும் என பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் நேரில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு தமக்­கான சந்­தர்ப்­ப­மொன்­றினை வழங்­கு­மாறும் அவ்­வ­மைப்பின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே கடி­த­மொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறித்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ரோஹிங்ய முஸ்­லீம்­களின் விவ­காரம் தொடர்பில் இலங்­கை­யிலும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட­ய­மா­னது எமது நாட்­டிற்கு நேர­டி­யான தாக்­கத்­தினை செலுத்­தா­வி­டினும் இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­பது தொடர்பில் நியா­ய­மான கொள்­கை­களை வகுப்­பது அவ­சி­ய­மாகும். 

பல்­வேறு அர­சியல் உள்­நோக்­கங்கள் அடிப்­ப­டையில் மியன்மார் ரோகிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான  போராட்­டங்­களின் வாயி­லாக சமூ­கத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லு­மான முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­னது பெரும் கவ­லைக்­கு­ரி­ய­தொன்­றாகும்.

எனவே, இந்த விட­யத்தில் உரிய கொள்­கை­யினை நாட்டில் அவ­ச­ர­மாக உரு­வாக்­கா­விடில் பார­தூ­ர­மான எதிர்­வி­ளை­வு­களை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும். ஆகவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் தங்­க­ளிடம் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு எமது அமைப்பின் தலைவர் ஞான­சா­ர­தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் தயா­ர­க­வுள்­ளனர். எங்­க­ளுக்கு தங்­களை நேர­டி­யாக சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு வேண்டுகிறோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகேவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. உங்களை உருவாக்கி வளர்த்த சம்பிக்க ரணவக்கவுக்கு பைத்தியம் பிடித்து அன்கொடையில் சேர்த்தாச்சு! உங்களுக்கு எப்ப பைத்தியம் பிடிக்க போகுது?

    ReplyDelete

Powered by Blogger.