சார்ஜாவில் ஒரே குடும்பத்தினரான, 3 இலங்கையர் தற்கொலை
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து இலங்கையர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக சார்ஜா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஆணொரு வர், பெண்ணொருவர் மற்றும் இளைஞரொருவரும் அடங்குவதாக வும் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய ஏனைய இருவரும் பெண்கள் எனவும் அவர்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 55 வயதான ஆண், அவரது மனைவியான 54 வயதான பெண் மற்றும் அவர்களது 19 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
அவர்களது சடலங்கள் அல் குவைத்தி வைத்தியசாலைக்கு மரண பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
காப்பாற்றப்பட்ட பெண்கள் இருவரும் 17 மற்றும் 27 வயதானவர்கள் எனவும் அவர்கள் சிகிச்சைகளுக்காக அல் குவைத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் உளநல சிகிச்சைகளுக்கு வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி அதிகாலை 2. 30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றின் ஏழாவது மாடியிலிருந்து ஆண்களில் ஒருவர் கீழே குதிப்பதனை அவதானித்த அயலவரொருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தார். இதையடுத்தே இவ்விவகாரம் அம்பலமாகியது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த குடியிருப்பு தொகுதியின் ஏழாவது மாடிக்கு சென்று உயிரிழந்த நபர் பாய்ந்ததாக கூறப்படும் வீட்டை திறப்பதற்கு முற்பட்ட போதிலும் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தமையினால் உரிய அனுமதிப்பெற்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அதன்போது வயோதிபப் பெண்ணொருவரும் மேலும் இரு இளம் பெண்களும் இரத்த வௌ்ளத்தில் காணப்பட்டதுடன் அவர்களது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர. அத்துடன் வௌ்ளை போர்வையில் சுற்றப்பட்டிருந்த மற்றொரு இளைஞனின் சடலத்தையும் அங்கிருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
Post a Comment