Header Ads



சார்ஜாவில் ஒரே குடும்பத்தினரான, 3 இலங்கையர் தற்கொலை


ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் தற்­கொ­லைக்கு முயன்ற ஐந்து இலங்­கை­யர்­களில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சார்ஜா பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

உயி­ரி­ழந்­த­வர்­களில் ஆணொ­ரு வர், பெண்­ணொ­ருவர் மற்றும் இளை­ஞ­ரொ­ரு­வரும் அடங்­கு­வ­தா­க வும் தற்­கொ­லைக்கு முயன்று உயிர் தப்­பிய ஏனைய இரு­வரும் பெண்கள் எனவும் அவர்கள் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வத்தில் 55 வய­தான ஆண், அவ­ரது மனை­வி­யான 54 வய­தான பெண் மற்றும் அவர்­க­ளது 19 வய­தான மகன் ஆகி­யோரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளனர்

அவர்­க­ளது சட­லங்கள் அல் குவைத்தி வைத்­தி­ய­சா­லைக்கு மரண பரி­சோ­த­னைக்­காக எடுத்துச் செல்­லப்­பட்­டது.

காப்­பாற்­றப்­பட்ட பெண்கள் இரு­வரும் 17 மற்றும் 27 வய­தா­ன­வர்கள் எனவும் அவர்கள் சிகிச்­சை­க­ளுக்­காக அல் குவைத்தி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டதன் உள­நல சிகிச்­சை­க­ளுக்கு வேறு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி அதி­காலை 2. 30 மணி­ய­ளவில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு தொகு­தி­யொன்றின் ஏழா­வது மாடி­யி­லி­ருந்து ஆண்­களில் ஒருவர் கீழே குதிப்­ப­தனை அவ­தா­னித்த அய­ல­வ­ரொ­ருவர் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்தார். இதை­ய­டுத்தே இவ்­வி­வ­காரம் அம்­ப­ல­மா­கி­யது.

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலிஸார் குறித்த குடி­யி­ருப்பு தொகு­தியின் ஏழா­வது மாடிக்கு சென்று உயி­ரி­ழந்த நபர் பாய்ந்­த­தாக கூறப்­படும் வீட்டை திறப்­ப­தற்கு முற்­பட்ட போதிலும் கதவு உள்­பக்­க­மாக தாளி­டப்­பட்­டி­ருந்­த­மை­யினால் உரிய அனு­ம­திப்­பெற்று கதவை உடைத்து உள்ளே சென்­றுள்­ளனர்.

அதன்­போது வயோ­திபப் பெண்­ணொ­ரு­வரும் மேலும் இரு இளம் பெண்­களும் இரத்த வௌ்ளத்தில் காணப்­பட்­ட­துடன் அவர்களது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர. அத்துடன் வௌ்ளை போர்வையில் சுற்றப்பட்டிருந்த மற்றொரு இளைஞனின் சடலத்தையும் அங்கிருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.