1990 இல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், சிதறுண்டு வாழ்வது மிகவும் மனவருத்தத்துக்குரியது -
மதத்தின் பேரால் அடிபட்டு சாவதும், பிரிந்து நிற்பதும் எமது அறியாமையாகும். இதை அனைத்து மதங்களும் மதத் தலைவர்களும் இடித்து உரைக்கின்றபோதும் அதை நாம் கேட்பதாக இல்லை. மூவின மக்களும் பகைமைகளை மறந்து சகோதரர்களாக வாழத் தலைப்பட்டால் இந்த நாட்டுக்கு இணை இந்த நாடுதான் மட்டுமே இருக்க முடியும். எனவே, காலம் கடந்த நிலையில் எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
மன்னார் எருக்கலம்பிட்டியில் பத்தாவது ஹஜ் பெருவிழாநடைபெற்றது. இவ்விழாவின் இறுதி நாளாகிய செவ்வாய் கிழமை வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸின் ஏற்பாட்டில் அழைக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். செட்டிக்குளம் மக்கள் வங்கி முகாமையாளர் அப்துல் ஹக் முகமட் ஆரூஸ் தமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இங்கு தொடர்ந்து பேசுகையில்,
வட மாகாணத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள், கிராம பகுதி மக்கள் 1990ம் ஆண்டு இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நீங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்வது மிகவும் மனவருத்தத்துக்குரியது.
இவ்வாறு வெளியேறிச் சென்ற மக்களில் கணிசமான தொகையினர் மீள தமது பிரதேசத்தில் வந்து மீள்குடியேறியபோதிலும் குறிப்பிட்ட தொகையினர் இடம்பெயர்ந்த இடங்களில் தமக்கென இடங்களை தயாரித்துக் கொண்டு அப்பகுதியிலே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே குடும்பம்போன்று இந்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்த பொதிலும் 1990 இல் ஏற்பட்ட குழப்ப நிலமைகள் அவர்களுக்கு சிதறுண்ட வாழ்க்கை அமைப்பை உருவாக்கி விட்டது. எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓரளவு அறிவேன்.
இவர்கள் பகைமை அறிவு அற்றவர்கள். அனைத்து மதத்தினரையும் சகோதர்களாக கருதுபவர்கள். இவர்களின் வாழ்வு என்றும் சிதறுண்டு கிடக்கின்றபோதும் இஸ்லாமிய மக்களின் ஐந்தாவது இறுதி கடமையான ஹஜ் விழா நிகழ்வானது, எருக்கலம்பிட்டி முஸ்லிம் மக்கள் அனைவரும் வந்து இங்கு ஒன்றுகூடி தமது அன்பையும் மகிழ்வையும் தெரிவித்து, இஸ்லாத்தின் அதியுயர் கடமைகளை சிறப்பற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வானது இவ்வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது எனவும் கூறினார்.
முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு வரும் போது தடுப்பது யாரு..........?
ReplyDeleteCrocodile tears😅
ReplyDeleteCM is on his correct way, you and your muslim leaders can't even right to criti ise him,
DeleteGo and instruct theislamuc leaders to resettle the tamil ppl in Easeter provibce and to handover the grabbed land of tamils by muslims in warly 1990s. Then you xan find true tear from him
Why the hell did he refuse to pass a resolution at the Northern Provincial Council condemning LTTE and call their act as ethnic cleansing?
ReplyDeleteBecause eastern province has been established before NP and still even single resolution has not been passes against Tamol cleansing by muslim arm forces on 1990s and some villagers were takenover by the muslim jihadis and kimmed tamil children and women like coward.
DeleteFirst East province must pass resolution against that incidents. Then you guys can talk about NP and CM.
Why you are spitting poission.
plz let me know if u know anybody to cure this type of disease.
ReplyDeleteI have to treat lot of muslim leaders and mosque authoritoes first