Header Ads



வசீம் தாஜூடீன் உடற்கூறுகள் காணாமல் போனமை, ஆனந்த சமரசேகர குற்றவாளி

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூடீன் உடற்கூறுகள் காணாமல் போன சம்பவத்தில் கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளி என இலங்கை மருத்துவச் சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஆனந்த சமரசேகரவின் மருத்துவ அனுமதிப்பத்திரத்தை 6 மாதங்களுக்கு தடை செய்ய மருத்துவச் சபை முடிவு செய்துள்ளது.

மருத்துவச் சபை மேற்கொண்ட விசாரணைகளில் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட வசீம் தாஜுடீனின் உடற்கூறு பரிசோதனைகளை மேற்கொண்ட ஆனந்த சமரசேகர, அந்த உடற்கூறுகளை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.