Header Ads



சிறிய அடிப்படைவாதக் குழு, சவால் விடும்போது அரசாங்கம் மௌனமாக இருக்கமுடியாது

நாட்டு மக்களைப் பணயம் வைக்கும் வகையில், சிறியதொரு அடிப்படைவாதக் குழு, ஜனநாயகத்துக்குச் சவால் விடும் போது, மக்களின் அரசாங்கம் ஒன்றினால் மௌனமாக இருக்க முடியாது என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக உரிமைகள் என்ற போர்வையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால், அவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தி, அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுடுத்த முனையும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் மீது காவல்துறையினர் இன்னும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. Joke of the day by mr.Ravi karunanayakee.... how long poli.ce use the same words?

    ReplyDelete
  2. Sir !
    நாங்கள் கூறுவதையே நீங்களும் கூறுகிறார்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களித்தவர்கள். இதனூடாக அதிகாரம் உங்கள் கைகளில் தரப்பட்டுள்ளது. இவ் அதிகாரங்களை வைத்துக்கொண்டு நாங்கள் விடுக்கவேண்டிய அறிக்கையை நீங்கள் விடுக்காது சட்டத்தை கையில் எடுத்தவரகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து உங்களது philosophy யான நல்லாட்சியை நடைமுறையில் காட்டுங்கள். இல்லையேல் உங்களது தலைவருடன்சேர்ந்து 1994-2015 வரை உட்கார்ந்திருந்த பாராளுமன்ற கதிரைகளை தூசிதட்டம் நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.