Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்காக, சுவிஸில் உருக்கமான துஆ பிரார்த்தனை

சுவிசர்லாந்தில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் ரமழான் பிறை 27 அன்று சிறப்பு இரவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இலங்கையிலிருந்து வருதை தந்துள்ள அப்துல்லாஹ் பாயிஸ் (ரசாத்தி) தராவிஹ், வித்துரு, கியாமுல் லைல் மற்றும் திக்ர் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இதன்போது இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்காக உருக்கமான துஆப் பிரார்த்தனையும் அழுது அழுது செய்தார்.

முஹம்மது நபியை கொல்லவந்த உமருக்கு ஹிதாயத் கொடுத்த ரப்பே, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு உனது ஹிதாயத்தை வழங்கு எனவும், இறைவனே எங்களுடைய விடயங்கள் அனைத்தையும் உன்னிடமே பொறுப்பு சாட்டுகிறோம் எனவும் அவருடைய பிரார்த்தனை அமைந்திருந்தது.

No comments

Powered by Blogger.