பாராளுமன்றத்திற்குள் சலசலப்பு..!
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்கு சென்றுள்ளது.
செப்பு மற்றும் பிற உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு மாதம் ஒரு முறை கீழே இறக்கி அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே பொருத்தப்படும்.
அதனை கீழே இறக்கும் போதும் உரிய உயரத்தில் நிறுத்தப்படும் பின்னர் ஏணியின் உதவியுடன் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின் மோட்டார் ஊடாக மேலே கீழே இறக்கி ஏற்றப்படும் குறித்த மின் விளக்கினை இருந்த இடத்தில் பொருத்தப்பட்ட சந்தர்பத்தில் திடீரென பூமிக்கு இரண்டு அடி மட்டம் வரையில் கீழே வேகமாக இறங்கியுள்ளது.
மின் விளக்கினை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர் உடனடியாக செயற்பட்டு, மின்விளக்கினை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் பதற்றமடைந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால அந்த இடத்திற்கு வருகைத்தந்து மின் விளக்கை பொருத்தும் வரும் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் நாடாளுமன்றத்திற்குள் எந்தவொரு உறுப்பினரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பார்லிமென்ட் நிகழ்ச்சி நடக்கும்போது எங்காவது சீர்திருத்த வேலையோ,துப்பரவு வேலையோ செய்வார்களா?
ReplyDeleteSri lanka parliment actives look like robinhoods show!
ReplyDelete