Header Ads



ஐபோனை சார்ஜ் போட்டு, தூங்கியவருக்கு ஏற்பட்ட பயங்கரம்

ஐ போனை சார்ஜ் போட்டு தூங்கிய நபருக்கு மின்சாரம் தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விலே டே (32) என்னும் நபர் சில தினங்களுக்கு முன்னர் தன் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இரவு விலே நன்றாக தூங்கிவிட்டு காலை வேளையில் தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்துள்ளார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த் இரும்பு உலோக சங்கிலி, அருகில் இருந்த சார்ஜர் ஹெட்டுடன் உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.

மின்சாரம் விலேவின் கழுத்தில் பாய அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனை சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார்.

ஆனாலும் தற்போது அவர் கண் பார்வை மங்கியுள்ளது. மேலும் அவரின் இதயத்துடிப்பு அவரின் காதுகளுக்கு இடிச்சத்தம் போல கேட்கிறது.

தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் தற்போது அவரருகில் சார்ஜ் போடுவதில்லை.

யாரும் செல்போனுக்கு சார்ஜ் அருகில் வைத்து போடாதீர்கள் என விலே எச்சரிக்கிறார்.

1 comment:

  1. இவன யாரு கலுத்தில சஙகிலி மாட்ட சாெ ன்னது வ

    ReplyDelete

Powered by Blogger.