Header Ads



கொழும்பு குப்பைகளை, பிலியந்தலையில் கொட்டாதே என ஆர்ப்பாட்டம்

பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களுக்கான நுழைவாயிலின் முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் என்றே, போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், கொழும்பிலிருந்து அங்குச்சென்ற, எட்டு குப்பை பவுசர்களை திருப்பியனுப்பிவிட்டனர்.

அங்கு சுமார் 300-400 வரையிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.