Header Ads



மறிச்­சுக்­கட்டிக்கு செல்கிறது, முக்கிய குழு

-MC.Najimudeen-

வில்­பத்து வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்குப் பாதிப்­பில்­லாத தீர்­வினை முன்­வைப்­ப­தற்கு மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சூழல் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் தலை­மை­யி­லான குழு எதிர்­வரும் 27ஆம் திகதி மன்னார் மறிச்­சுக்­கட்­டிக்கு விஜ­யம்­செய்து கள ஆய்­வினை மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும் அவ்­வாய்­வி­னூ­டாக ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்த­மானி அறி­வித்­தலின் பிர­காரம், அதில் பிர­தேச மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி இருப்­பது உறு­தி­செய்­யப்­ப­டு­மி­டத்து வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலை இரத்­து­செய்து திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட புதிய வர்த்­தமானி அறி­வித்தல் வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி. அபேகோன் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

No comments

Powered by Blogger.