கம்பளையில் இப்படியும் நடந்தது
கடமை நிமித்தம் சென்றுகொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நாயொன்று கடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாயின் உரிமை யாளரான பெண்ணுக்கு கம்பளை நீதிவான் சாத்தனி மீகொட 5,000 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது. கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளான துஷார கடமையின் நிமித்தம் ஏத்கால லக் ஷ்பிஹில்ல என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இவரை நாய் கடித்துள்ளது.
வீட்டின் பாதுகாப்புக்காக வளர்க்கும் நாயை கட்டாக்காலியாக வீதியில் விடாமலும் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் வளர்க்கும்படி நீதிவான் நாயின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Post a Comment