Header Ads



தேசா­பி­மா­னிகள் பட்­டி­யலில், முஸ்­லிம்கள் எவரும் இல்லையா..?


ஆங்­கி­லே­யர்­களால் தேசத்­து­ரோ­கி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை தேசா­பி­மா­னிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­த­வென கண்­டியில் நடை­பெற்ற விழாவின் போது வெளி­யி­டப்­பட்­டுள்ள பட்­டி­யலில் முஸ்­லிம்கள் எவரும் இடம் பெற்­றி­ருக்­க­வில்லை.இவ்­வாறு தேசத்­து­ரோ­கி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­வர்­களை தேசா­பி­மா­னிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த புத­னன்று (1.3.2017) கண்­டியில் கைசாத்­திட்டார். இந்த வைபவம் தலதா மாளி­கையின் மங்­குல்­ம­டுவ எனும் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

ஆங்­கி­லே­யர்­களால் சில முஸ்­லிம்­களும் தேசத்­து­ரோ­கிகள் என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பிர­க­ட­னத்தை இரத்துச் செய்யும்படி கிழக்கு மாகாண அர­சி­யல்­வா­திகள் ஜனா­தி­ப­தி­யி­டமும் புத்த சாசன, நீதி­ய­மைச்சர் கலா­நிதி விஜே­தாஸ ராஜபக் ஷ விடமும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர்.

இதை இவர்கள் ஏற்றுக் கொண்­ட­தா­கவும் ஊடக செய்­திகள் கூறின.எனினும், கண்­டியில் நடந்த விழாவில் 89 பேர் தேசா­பி­மா­னி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பட்­டி­யலில் எந்த முஸ்­லிம்­களின் பெயரும் இடம் பெற­வில்லை.

இந்த வைப­வத்தில் முஸ்லிம் விவ­கார, தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, அமைச்சர் லக்  ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உட்பட பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள் பெருந் தொகையில் கலந்து கொண்டார்கள்.


2 comments:

  1. இதில் இருந்து விளங்குவது என்னவென்றால் ? வாசகர்களாகிய நாங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆம். இதிலிருந்து விளங்குவது என்னவென்றால், ஆங்கிலேயர் காலத்திலும் பிரிவினைப் போராட்ட காலத்திலும் முஸ்லிம்கள் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டுக்கு தூரோகிகளாக இருந்ததில்லை. விசுவாசமானவர்களாகவே இருந்துள்ளனர் என்பதுதான் அது. அப்படியானவர்கள்தான் இந்நாட்டை நீதமுடன் ஆள்வதற்கும் தகுதியானவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

    ReplyDelete

Powered by Blogger.