Header Ads



பெந்தோட்டைக் கடலிலிருந்து, ஜனாஸா மீட்பு

பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில், தர்கா நகரைச் சேர்ந்த 15 வயதுடைய மொஹமட் இம்சான் எனும் சிறுவனின் சடலம், இன்று மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

முன்னதாக சிறுவர்கள் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன்,  மொஹமட் இம்சானையும் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே, சடலம் மீட்கப்பட்டுள்ளது. தர்கா நகரைச் சேர்ந்த 13 வய​துடைய மீட்கப்பட்ட இரு சிறுவர்களும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

1 comment:

  1. ஒருவர் இறந்துவிட்டர்

    இன்னொருவர் வைத்தியசாலையில்,

    மற்றவருக்குடன் நான் நேற்று பேசினேன். அவருக்கு ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.