Header Ads



முஸ்லிம் குடும்பத்தினரின், வீட்டுக்குச் சென்ற பாப்பரசர்


இத்­தா­லியின் மிலன் நக­ருக்குச் சென்ற பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ் தொழி­லாளர் குடும்பம் மற்றும் முஸ்லிம் குடும்­ப­மொன்­றி­ன் வீடுகளுக்கும் சென்றார். 

நேற்று முன்­தினம் இத்­தா­லியின் மிலன் நக­ருக்கு  பாப்­ப­ரசர் சென்­ற­போது அங்­குள்ள 3 சிறிய குடி­யி­ருப்­பு­க­ளி­லுள்ள முஸ்லிம் குடும்­ப­மொன்றை சந்­தித்­துள்ளார். இவர்கள் மொரோக்­கோ­வி­லி­ருந்து  இத்­தா­லியில் குடி­யே­றி­யுள்­ளனர்.  

அவர்கள் பாப்­ப­ர­ச­ருக்கு இனிப்பு, பேரீச்­சம்­பழம் மற்றும் பால் அடங்­கிய சிற்­றுண்­டி­யையும் வழங்­கி­யுள்­ளார்கள். இந்த சந்­திப்­பி­னை­ய­டுத்து, இது உணர்ச்சி மிக்­க­தான தரு­ண­மாக இருந்­தது எனவும் வீட்­டுக்கு ஒரு நண்பர் வந்­தி­ருந்­தது போல் இருந்­தது எனவும் முஸ்ஸிம் குடும்­பத்தின்  தலைவர் அப்துல் கரீம் தெரி­வித்­துள்ளார். 

இத­னி­டையே, வய­தான இத்­தா­லிய தம்­ப­தி­யி­ன­ரையும் சந்தித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் ஆரோக்கியம் குறித்தும் விசாரித்துள்ளார். 

No comments

Powered by Blogger.