Header Ads



குவைத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட, இலங்கையர் மடக்கிப்பிடிப்பு

குவைத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைத்தல், வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் அபூர்வ சக்தி தன்னிடம் இருப்பதாக அவர் பலரையும் நம்ப வைத்து ஏமாற்றியிருந்தார்.

அவரை நாடிவரும் வாடிக்கையாளர்களிடம் 250 குவைத் தினார்கள் தொடக்கம் பெருந்தொகையான பணத்தை அவர் கட்டணமாக அறவிட்டுள்ளார்.

அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் குவைத் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் என்றும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபரின் மாந்திரீக வேலை குறித்து தகவல் அறிந்த பொலிசார் புலனாய்வு முகவர் ஒருவரின் உதவியுடன் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

1 comment:

  1. Hahaha என்ன காமடி அந்த மாந்திரிகனே குடும்பத்தை பிரிந்துமான் குவைத்தில் இருக்கிறான். அவன் அடுத்த குடும்பங்கள. சேர்தது வைக்கப்போகிறானா?
    கடைசியில் அவனைத்தான் பொலிசார் இலங்கையலிருக்கும் அவனது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.